tamilnadu

img

ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனைக்கான நேரத்தில் மாற்றம்

வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் மூலமாக பணப் பரிவர்த்தனை செய்யும் நேரத்தை மாலை 4.30 மணியில் இருந்து மாலை 6 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவது அதிகரித்து வருகிற நிலையில்,  ஆர்டிஜிஎஸ் ( Real Time Gross Settlement - RTGS ) எனப்படும் உடனடி பண பரிவர்த்தனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆர்டிஜிஸ் மூலம் 2 லட்சத்துக்கு அதிகமான தொகையை பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது ஆர்டிஜிஎஸ் மூலம் மாலை 4.30 மணி வரை பணம் அனுப்ப முடியும். 

இந்நிலையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல், ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனையை மாலை 6 மணி வரை செய்யலாம் என்றும்  வங்கிகளுக்கு இடையே மாலை 7.45 மணி வரை பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பரிவர்த்தனை கட்டணமாக காலை 11 மணியில் இருந்து 1 மணி வரை 2 ரூபாயும், பகல் 1 மணியில் இருந்து 6 மணி வரை 5 ரூபாயும், மாலை 6 மணிக்கு மேல் 10 ரூபாயும் வசூலிக்கப்படும்.